பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை விட ஆண்கள் செய்துகொள்ளும் புதிய குடும்பநல கருத்தடை எவ்வாறு சிறப்பு வாய்ந்தது?
பெண்கள் செய்து கொள்ளும் கருத்தடை
முறையானது பெண்களின் வயிற்றுப் பகுதியில் உள் உறுப்புகளில் செய்ய
வேண்டியுள்ளது. இதனால் அவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டியுள்ளது.
கத்தி, கத்திரிக்கோல் ஆகியவைகளை உபயோகித்து அறுவை சிகிச்சை செய்வதால்
பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். வலி ஏற்படும், தழும்பு தெரியும்.
மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இருக்கும். அன்றாட பணிகளை முன்போல
செய்யமுடியாத சிரமம் ஏற்படும். அவர்களின் உடல் பலவீனமடையும். இரத்தசோகை
ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே பெண்களை விட ஆண்களுக்கு செய்யும் No Scalpel
Vasectomy கருத்தடை எளிமையானது.
ஆண்களுக்கான ‘No Scalpel Vasectomy (NSV)’ முறை என்றால் என்ன?
பதில்: ஆண்களுக்கான புதிய கருத்தடை
முறையில் மயக்க மருந்து கொடுப்பதில்லை. உடலின் உள் உறுப்புகளில் எதையும்
அறுவை செய்யாமல், வெளிப்பக்கத்தில் மட்டும் ஓரிரு நிமிடங்களில்
செய்துவிடலாம். இது அறுவையில்லாத ஆண் கருத்தடை முறை என்று
அழைக்கப்படுகிறது. ஆணுறுப்பை மரத்துப் போகச் செய்ய ஊசி போடுவதால், இதைச்
செய்யும்போது வலி ஏற்படாது. விரைப்பையில் சிறுதுளையிட்டு, உயிரணுக்கள்
செல்லும் குழாயை கட் செய்து, இருபக்கமும் மூடி(seal) விடுவார்கள். அறுவையே
இல்லாததால் தையல் போட வேண்டிய அவசியமே இல்லை. அதனால் தழும்பும் இருக்காது.
மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் வீடு
திரும்பிவிடலாம். இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் சாதாரண வேலைகள்
செய்யலாம். எந்த உணவுக்கட்டுப்பாடும் தேவையில்லை. பின்விளைவுகள் ஏதும்
இருக்காது.
சிகிச்சைக்குப் பின் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுமா?
ஏற்படாது. உடலுறவின் உச்சகட்டத்தின் போது வெளியேறும் திரவத்தில், உயிரணுக்கள் ஒரு பங்கும் மற்ற திரவங்கள் ஒன்பது பங்கும் இருக்கும். இதில் உயிரணுக்கள் வருவதை மட்டும் இந்த சிகிச்சை முறை மூலம் தடை செய்வதால், மற்ற 9 பங்கு திரவம் வழக்கம் போல் வெளியேறும். இல்லற வாழ்க்கை முன்போலவே இருக்கும்.
ஏற்படாது. உடலுறவின் உச்சகட்டத்தின் போது வெளியேறும் திரவத்தில், உயிரணுக்கள் ஒரு பங்கும் மற்ற திரவங்கள் ஒன்பது பங்கும் இருக்கும். இதில் உயிரணுக்கள் வருவதை மட்டும் இந்த சிகிச்சை முறை மூலம் தடை செய்வதால், மற்ற 9 பங்கு திரவம் வழக்கம் போல் வெளியேறும். இல்லற வாழ்க்கை முன்போலவே இருக்கும்.
இந்த கருத்தடை முறையை ஏற்றுக் கொண்டபின் குழந்தை பிறக்கும் வாய்ப்புண்டா?
இந்த கருத்தடை முறையை ஏற்று 7
நாட்களுக்குப் பிறகு மனைவியுடன் உடலுறவு கொள்ளலாம். ஆனால் 20 உடலுறவு வரை
கண்டிப்பாக ஆணுறையை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஏற்கனவே
உருவாகியிருக்கும் விந்து அனைத்தும் வெளியேறுவதற்கான அவகாசம் தேவை. 20
உடலுறவுக்குப்பின் விந்து பரிசோதனை செய்து விந்து நீரில் உயிரணுக்கள் இல்லை
என்று அறிந்தபின் ஆணுறையின்றி உடலுறவில் ஈடுபடலாம். கரு உண்டாகாது.
இந்த ஆண்களுக்கான புதிய கருத்தடை முறை எங்கு செய்யப்படுகிறது?
தமிழ்நாட்டில் அனைத்து அரசு
மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரால் எல்லா வேலை நாட்களிலும்,
மாதமிரு முறை சிறப்பு முகாம்களிலும் செய்யப்படுகிறது. மத்திய, மாநில அரசு
ஊழியருக்கு சிறப்பு விடுப்பு உண்டு. ஊக்கத்தொகையாக ரூ.1100
வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
திட்ட அலுவலர் குடும்ப நலப்பிரிவு எண் – 35,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை – 10.
தொலைபேசி: 28364951 Extn: 319. கைப்பேசி: 98413 08266
நன்றி கீற்று :
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=919:2009-10-24-15-39-52&catid=16:sex&Itemid=98- சங்கராச்சாரி
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=919:2009-10-24-15-39-52&catid=16:sex&Itemid=98- சங்கராச்சாரி
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
4 comments:
Re-operation க்கு வழி உண்டா? அதாவது காலத்தின் கட்டாயம் ஒரு குழந்தை பெற வேண்டும்!!
உண்டு ! இப்போது இது அதிக அளவிலேயே செய்யமுடிகிறது! ஆனால், இதைச் செய்துகொள்வதால் விந்தணு மீண்டும் வரத் துவங்கும் என்ற உத்திரவாதம் இல்லை! மேலும், இதைச் செய்ய அதிகப் பணம் செலவாகும். கவனம்! கவனம்!
இதனை ஆண்கள் செய்வதால் எந்தத் தொந்தரவுமே இருக்காதா?
இல்லை எனச் சொல்ல முடியாது! எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் வரக்கூடிய கோளாறுகள்[infection] இதிலும் வரலாம்..... கவனமில்லாமல் இருந்தால். சீழ் பிடித்தல், ஜுரம், ரத்தப்போக்கு போன்றவை ஒருசிலருக்கு வரலாம். ஆனால், இதன் சாத்தியக்கூறு இப்போதெல்லாம் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.
Post a Comment