Thursday, July 19, 2012

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு


பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.
உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்' என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும். அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இதேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவதன் மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. தினசரி ஒருமணிநேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும். இது உடலில் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கிறது. இதனால் டெஸ்டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதிகரிக்கும். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது.
by-vayal
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


3 comments:

Unknown said...

அருமையான பதிவு.. நல்ல பல விளக்கங்களை தந்தது.. இன்றைய காலத்தில் சுய இன்பம் அடைவது இளைஞர்களிடையே பரவலாக உள்ளது. இதனால், விந்தனுக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படும்.?

தஞ்சை தேவா said...

நன்றி திரு பிரபு செல்வராஜ் அவர்களே!
பெரும்பாலும் இந்த சந்தேகம் நிறைய பேருக்கு இருந்து வருகிறது.இதற்க்கான விளக்கத்தை டாக்டர். பிராகாஷ் கோத்தாரி தெளிவாக விளக்கி இருந்தார்.

அதாவது தொன்றுதொட்டு இந்திய முறை மருத்துவங்கள் அனைத்தும் விந்து ஒரு உயிர்நிலைத் திரவம். இதை வீணாக்குவது உடலுக்கு மிகுந்த கேடு விளைவிக்கும் என்று கருத்தையே பரப்பி வந்துள்ளன.

கிராப்ட் எப்பிங் போன்ற சில மேலைநாட்டுப் பாலியலார் கூட சுய இன்ப விந்து இழப்பு மனநோய் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடும் என நம்பினர். நாட்டு மருத்துவர்கள் தாது நஷ்டத்தால் நரம்புத் தளர்ச்சி, பலவீனம், கண்களைச் சுற்றிக் கருவளையம் போன்ற குறைபாடுகள் ஏற்படலாம் என்றும் கூறி வந்துள்ளனர்.

ஒவ்வொரு துளி விந்தும், 40 துளி இரத்தத்தைக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்னும் ஒரு தவறான கருத்து காலம் காலமாக நம்மிடையே பரப்பப்பட்டு வந்துள்ளது. இதனால் உடலுறவின் மூலமாகவோ, சொப்பனத்திலோ, சுய முயற்சியாலோ விந்து வெளியேறுகின்ற போது உடல் தன் சக்தியை இழக்கிறது என்று ஒவ்வொரு ஆணும் நம்புவதால் விந்து இழப்பு பெரும் தீங்கு என்ற கருத்து இங்கு நிலவி வருகிறது.

மேற்கண்ட கூற்றுகளில் உண்மை எதுவும் இல்லை என்றும் அறிவுக்குப் புறம்பான கற்பனைக் கதைகள் என்றும் நவீன மருத்துவ முறைகளின் மூலம் நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

ஆண்களின் பிறப்பு உறுப்புக்களான விரை, புராஸ்டேட், செமினல் வெசிகிள் எனப்படும் விந்துச் சிமிழ் போன்றவைகள் விந்து உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. எனவே கட்டாயமாகப் பிரமச்சரியம் அனுஷ்டிப்பதைவிட, சுய இன்பம் மூலம் விந்து வெளிப்படுவதில் தவறில்லை.

எடுத்துக்காட்டாக ஒரு பாத்திரம் தண்ணீரால் நிரப்பப்பட்டிருக்கும் போது மேலும் தண்ணீரை அதில் சேர்த்தால் அளவின் மிகுந்த நீர் வடியத் தொடங்குகிறது. இதே போல் நீண்ட நாட்களுக்கு விந்து வெளியேற்றப்படாமல் இருக்கின்ற போது மேலும் விந்து அதில் சேர்ந்தால் மிகுதியாக உள்ள விந்து தானாகவே கனவில் வெளியேறிவிடுகிறது. இது ஒரு இயல்பான செயல். இதில் எந்தத் தவறும் கிடையாது. எந்தத் தீங்கும் நேராது.

விந்தணுக்களின் அடர்த்தி ஒருவரது விந்தில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது இல்லாமலோ போனால் அவருக்கு ஆண் தன்மை குறைவாக இருக்கும் என்கிற கருத்தும் தவறானது. மலட்டுத்தன்மை வேறு. ஆண்மை உணர்வும், வீரியமும் வேறு. ஒருவன் மலடாக இருக்கலாம். அதற்காக அவன் வீரியம் குன்றியவன் என்று பொருளில்லை. அதே போன்று போதிய விந்தணுக்கள் உள்ளவன் ஆண்மை உணர்வற்று இருக்கவும் கூடும். இது பெரும்பாலும் விரையினுள் இருக்கும் சில செல்களைப் பொறுத்தே அமைகிறது.

Unknown said...

அருமையான விளக்கம். நன்றி திரு.தஞ்சை தேவா அவர்களே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls