மார்பகப் புற்றுநோய் பெண்கள் மத்தியில் கூடுதலாகப் பரவுவதால் அது பற்றிய
விழிப்பு அவசியமாகின்றது. மார்புப்புற்று நோயின் தோற்றம் பரவலுக்கு உணவுப்
பழக்கம், தவறான கருத்தடை மாத்திரைப் பயன்பாடு, பெண்ணின் பரம்பரை என்பன
முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப் படுகின்றன.
பெண்கள் தமது மார்புகளைக் காலந் தவறாது சுயபரிசோணை செய்ய வேண்டும். இதன் மூலம் தாமாக நோயின் அறிகுறியை அடையாளம் காணமுடியும். ஓவ்வோரு மாதமும் மாதவிடாய் முடிந்த பிறகு இந்தப் பரிசோதனையைச் செய்யவேண்டும். மாதவிடாய் வருவதற்கு முன்போ, மாதவிடாய் நேரத்திலோ பரிசோதனை செய்யக் கூடாது.
ஏனென்றால்; இந்தக் காலங்களில் பெண்களின் உடலில் அதிகளவு ஹோர்மோன்கள் சுரக்கின்றன. அப்போது மார்பகங்கள் சற்றுப் புடைத்திருக்கும். சுயபரிசோதனைக்காக விரல்களால் மார்பை அழுத்தும் போது வலி ஏற்படும். ஆகையால் மாதவிடாய் முடிந்த பிறகு சுயபரிசோதனை செய்வதுதான் பொருத்தமான நேரம்.
பரிசோதனை செய்யும் போது கட்டிகள் கைவிரலில் தட்டுப்பட்டால் உடனடியாக அது புற்றுநோயின் அறிகுறி என்று அச்சமடைய வேண்டாம். பல தீங்கற்ற கட்டிகள் மார்பில் உண்டாகின்றன. அவற்றில் ஒன்றாக இந்தக் கட்டிகள் இருக்கக் கூடும். மார்பகப் பரிசோதனையில் தென்படும் கட்டிகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
மருத்துவர் மார்பக் புற்றுநோய் பற்றிய அறிவும், அனுபவமும் உள்ளவராக இருத்தல் மிகவும் அவசியம். வீட்டு மருத்துவம் பார்ப்பதையும் தவிர்;க்க வேண்டும். மருத்துவ நூல்களில் சுயபரிசோதனை செய்யும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
நல்ல வெளிச்சம் விழும் நிலைக்கண்ணாடி முன் நின்று ஆடைகள் அகற்றப்பட்ட மார்பங்களை பரிசோதியுங்கள். மார்பகஙகளின் வடிவம், நிறம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கூர்மையாக அவதானிக்க வேண்டும். மார்பகத் தோல் மடிப்புக்கள் அல்லது குழிகள் ஏற்பட்டுள்ளனவா என்றும் பார்க்கவேண்டியதும் மிக அவசியம்.
மார்பகக் காம்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளனவா என்றும் பார்க்கவேண்டும். கைகள் இரண்டும் தலைக்கு மேல் உயர்த்தியபடி மார்பக அவதானிப்பைச் செய்யவேண்டுமென ஆலோசனை கூறப்படுகிறது. மார்புக் காம்புகளில் இருந்து திரவக் கசிவு ஏற்படுகிறதா என்பதையும் அவற்றின் நிறத்தில் மாற்றம் வந்துள்ளதா என்பதையும்; அவதானித்தல் அவசியம்.
இரு மார்புகளையும் ஓப்பீட்டுப்பார்க்கும் போது ஒன்றுக் கொன்று கடும் வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சில பெண்பாலருக்கு இயல்பாகவே ஒரு மார்பு பெரிதாகவும் அடுத்தது சற்றுச் சிறியதாகவும் இருப்பது வழமை. இந்த விவரத்தையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
மார்பகப் பரிசோதனையின் போது கீழ்பகுதியில் இருந்து ஆரம்பித்து இடப்பக்கம் வலப்பக்கமாக சீரான வட்டத்தில் பரிசோதிப்பது ஒழுங்கான முறை. அடுத்ததாக மார்புக் காம்புகளை பரிசோதிக்கலாம். உங்கள் வலது கை விரல்களை ஒன்றிணைத்து மார்பின் மேல் வைத்து அழுத்தித் தடவிப் பரிசோதிக்க வேண்டும்.
மார்பகத்தின் உட்புறத்தைப் பரிசோதிக்கத் தவறக் கூடாது. அதே போல் அக்குகளின் கீழ் அழுத்தித் தடவி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதேனும் கட்டிகள் தென்பட்டால் கால தாமதமின்றி மருத்துவரை நாடுவது சிறந்த அனுகுமுறையாகும்.
சி;கிச்சையைத் தொடங்குமுன் மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சைவழங்கும் மருத்துவர் நோயாளியின் தன்மையை நன்கு புரிந்து கொள்வது அவசியம். எல்லாப் பெண்களுக்கும் ஒரே விதமான மருத்துவம் பொருத்தமாக மாட்டாது. அதனால் அவர் தீவிர பரிசோதனைக்குப் பிறகு சிகிச்சை முறையைத் தீர்மானிக்க வேண்டும்.
நோயாளியின் வயது, உடல் ஆரோக்கிய நிலமை உட்பட அவருக்கு மாதவிடாய் நின்று விட்டதா என்பதை முக்கியமாக் கவனிக்க வேண்டும். நோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது, அதாவது ஆரம்பத்திலா அல்லது நன்கு பரவி விட்டதா எனபதையும் அறிய வேண்டும். இவற்றின் அடிப்படையில் மாத்திரமே சிகிச்சையைத் தொடங்கலாம்.
மார்பகப் புற்றுநோயின் ஐந்து நிலைகள் இருப்பதாக தகுதிவாய்ந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள.. முதலாவதாகத் தொடக்க நிலை. புற்றுநோயின் தாக்கம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால்; ஒரு சில செல்கள் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நிலையில் நோய் மார்பகத்திற்குள் இருக்கும். மார்புக்குள் நோய் அடங்கியிருக்கும் புற்று நோயின் அளவு 2 செ.மீP யாக இருக்கும்.
மூன்றாவது நிலையில் மார்புப் புற்றுநோயின் அளவு 2 செ.மீ யைத் தாண்டி பரவத் தொடங்கும். அக்குளில் உள்ள நிணநீர்க் கழலைகளில் (Lymph nodes) நோயின் தாக்கம் காணப்படும். நான்காவது நிலையில் 5 செ.மீP அளவிற்குப் புற்று நோய் வளர்;ந்து அக்குள் நிணநீர் கழலைகளைத் தாக்கிய பின் மற்ற நிணநீர்க் கழலைகளுக்கும் பரவி விடும்.
அதே நேரத்தில் மார்பகத்திற்கு அருகில் உள்ள திசுக்களையும் தாக்கத் தொடங்கியிருக்கும். ஐந்தாவதும் இறுதியுமான நிலையில் மார்புக்கு அப்பாலுள்ள பிற உறுப்புக்களான எலும்பு, கல்;லீரல், நுரையீரல், மூளை, ஆகியவற்றிற்குப் புற்றுநோய் பரவிச் செறிந்து விடும்.
வருமுன் தடுப்பது சிறந்த உபாயம் ஆகையால் பெண்கள் கால தாமதமின்றி மார்பகப் புற்றுநோய்கான சுயபரிசோதனை செய்வது மிகவும் அத்தியாவசியம்.
பெண்கள் தமது மார்புகளைக் காலந் தவறாது சுயபரிசோணை செய்ய வேண்டும். இதன் மூலம் தாமாக நோயின் அறிகுறியை அடையாளம் காணமுடியும். ஓவ்வோரு மாதமும் மாதவிடாய் முடிந்த பிறகு இந்தப் பரிசோதனையைச் செய்யவேண்டும். மாதவிடாய் வருவதற்கு முன்போ, மாதவிடாய் நேரத்திலோ பரிசோதனை செய்யக் கூடாது.
ஏனென்றால்; இந்தக் காலங்களில் பெண்களின் உடலில் அதிகளவு ஹோர்மோன்கள் சுரக்கின்றன. அப்போது மார்பகங்கள் சற்றுப் புடைத்திருக்கும். சுயபரிசோதனைக்காக விரல்களால் மார்பை அழுத்தும் போது வலி ஏற்படும். ஆகையால் மாதவிடாய் முடிந்த பிறகு சுயபரிசோதனை செய்வதுதான் பொருத்தமான நேரம்.
பரிசோதனை செய்யும் போது கட்டிகள் கைவிரலில் தட்டுப்பட்டால் உடனடியாக அது புற்றுநோயின் அறிகுறி என்று அச்சமடைய வேண்டாம். பல தீங்கற்ற கட்டிகள் மார்பில் உண்டாகின்றன. அவற்றில் ஒன்றாக இந்தக் கட்டிகள் இருக்கக் கூடும். மார்பகப் பரிசோதனையில் தென்படும் கட்டிகள் தொடர்பாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
மருத்துவர் மார்பக் புற்றுநோய் பற்றிய அறிவும், அனுபவமும் உள்ளவராக இருத்தல் மிகவும் அவசியம். வீட்டு மருத்துவம் பார்ப்பதையும் தவிர்;க்க வேண்டும். மருத்துவ நூல்களில் சுயபரிசோதனை செய்யும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
நல்ல வெளிச்சம் விழும் நிலைக்கண்ணாடி முன் நின்று ஆடைகள் அகற்றப்பட்ட மார்பங்களை பரிசோதியுங்கள். மார்பகஙகளின் வடிவம், நிறம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கூர்மையாக அவதானிக்க வேண்டும். மார்பகத் தோல் மடிப்புக்கள் அல்லது குழிகள் ஏற்பட்டுள்ளனவா என்றும் பார்க்கவேண்டியதும் மிக அவசியம்.
மார்பகக் காம்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளனவா என்றும் பார்க்கவேண்டும். கைகள் இரண்டும் தலைக்கு மேல் உயர்த்தியபடி மார்பக அவதானிப்பைச் செய்யவேண்டுமென ஆலோசனை கூறப்படுகிறது. மார்புக் காம்புகளில் இருந்து திரவக் கசிவு ஏற்படுகிறதா என்பதையும் அவற்றின் நிறத்தில் மாற்றம் வந்துள்ளதா என்பதையும்; அவதானித்தல் அவசியம்.
இரு மார்புகளையும் ஓப்பீட்டுப்பார்க்கும் போது ஒன்றுக் கொன்று கடும் வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சில பெண்பாலருக்கு இயல்பாகவே ஒரு மார்பு பெரிதாகவும் அடுத்தது சற்றுச் சிறியதாகவும் இருப்பது வழமை. இந்த விவரத்தையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
மார்பகப் பரிசோதனையின் போது கீழ்பகுதியில் இருந்து ஆரம்பித்து இடப்பக்கம் வலப்பக்கமாக சீரான வட்டத்தில் பரிசோதிப்பது ஒழுங்கான முறை. அடுத்ததாக மார்புக் காம்புகளை பரிசோதிக்கலாம். உங்கள் வலது கை விரல்களை ஒன்றிணைத்து மார்பின் மேல் வைத்து அழுத்தித் தடவிப் பரிசோதிக்க வேண்டும்.
மார்பகத்தின் உட்புறத்தைப் பரிசோதிக்கத் தவறக் கூடாது. அதே போல் அக்குகளின் கீழ் அழுத்தித் தடவி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏதேனும் கட்டிகள் தென்பட்டால் கால தாமதமின்றி மருத்துவரை நாடுவது சிறந்த அனுகுமுறையாகும்.
சி;கிச்சையைத் தொடங்குமுன் மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சைவழங்கும் மருத்துவர் நோயாளியின் தன்மையை நன்கு புரிந்து கொள்வது அவசியம். எல்லாப் பெண்களுக்கும் ஒரே விதமான மருத்துவம் பொருத்தமாக மாட்டாது. அதனால் அவர் தீவிர பரிசோதனைக்குப் பிறகு சிகிச்சை முறையைத் தீர்மானிக்க வேண்டும்.
நோயாளியின் வயது, உடல் ஆரோக்கிய நிலமை உட்பட அவருக்கு மாதவிடாய் நின்று விட்டதா என்பதை முக்கியமாக் கவனிக்க வேண்டும். நோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது, அதாவது ஆரம்பத்திலா அல்லது நன்கு பரவி விட்டதா எனபதையும் அறிய வேண்டும். இவற்றின் அடிப்படையில் மாத்திரமே சிகிச்சையைத் தொடங்கலாம்.
மார்பகப் புற்றுநோயின் ஐந்து நிலைகள் இருப்பதாக தகுதிவாய்ந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள.. முதலாவதாகத் தொடக்க நிலை. புற்றுநோயின் தாக்கம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால்; ஒரு சில செல்கள் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது நிலையில் நோய் மார்பகத்திற்குள் இருக்கும். மார்புக்குள் நோய் அடங்கியிருக்கும் புற்று நோயின் அளவு 2 செ.மீP யாக இருக்கும்.
மூன்றாவது நிலையில் மார்புப் புற்றுநோயின் அளவு 2 செ.மீ யைத் தாண்டி பரவத் தொடங்கும். அக்குளில் உள்ள நிணநீர்க் கழலைகளில் (Lymph nodes) நோயின் தாக்கம் காணப்படும். நான்காவது நிலையில் 5 செ.மீP அளவிற்குப் புற்று நோய் வளர்;ந்து அக்குள் நிணநீர் கழலைகளைத் தாக்கிய பின் மற்ற நிணநீர்க் கழலைகளுக்கும் பரவி விடும்.
அதே நேரத்தில் மார்பகத்திற்கு அருகில் உள்ள திசுக்களையும் தாக்கத் தொடங்கியிருக்கும். ஐந்தாவதும் இறுதியுமான நிலையில் மார்புக்கு அப்பாலுள்ள பிற உறுப்புக்களான எலும்பு, கல்;லீரல், நுரையீரல், மூளை, ஆகியவற்றிற்குப் புற்றுநோய் பரவிச் செறிந்து விடும்.
வருமுன் தடுப்பது சிறந்த உபாயம் ஆகையால் பெண்கள் கால தாமதமின்றி மார்பகப் புற்றுநோய்கான சுயபரிசோதனை செய்வது மிகவும் அத்தியாவசியம்.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
1 comments:
Good information ji
Post a Comment