நினைவில் மட்டுமே ருசிக்க கூடிய அவலம் - ஆற்று மீன்கள்.
முழுக்க முழுக்க மாமிசத்தை மட்டுமே உணவாக உட்கொள்ளும் ஆப்ரிக்க கெளுத்தி(cat fish) மீன்களால், மற்ற வகை மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. குறிப்பாக, இவை வளர்க்கப்படும் இடங்களில் அரிய வகை உள்ளூர் மீன்களின் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கெளுத்தி மீன்கள் மழைக்காலங்களில் தண்ணீர் வழியாக வெளியேறி, குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகளில் குடியேறி, அங்கு வளரும் உள்ளூர் மீன்களை கபளீகரம் செய்து விடுகின்றன.
அழிந்து ஆற்று மீன்களும் அதையொட்டிய எனது அனுபவங்களும்:-
வீட்டுக்கு பக்கத்துல ஓடுற கொங்கன் மற்றும் மண்ணியாறு பாசன வாய்க்காலின் மீன்களை அதிகம் ருசித்தவன். அப்பப்போ அருகில் உள்ள காவிரி, கொள்ளிட மீன்களையுன் விட்டு வைத்தது இல்லை. கடல் மீன்களை கண்ணால் பார்த்ததே சென்னை வந்த பிறகுதான்.
ஊர்ல இருக்கும் போது சனி ஞாயிறு ஆச்சுன்னால பசங்கள கெளப்பிகிட்டு மீன் பிடிக்க கெளம்பிடுவோம். தூண்டிலும் கொட்டாங்குச்சியில் மண் புழுவும் எடுத்துக்கொண்டு குடையோடு கெளம்பிடுவோம். எப்படியும் 3 மணிக்குள்ள தேவையான மீன்களோடு தான் வீட்டுக்கு வருவோம்.
அதோடு மீன் வாங்கணும்னா தெருவோடு மீன் பிடிச்சுகினு போகும் வலைகாரங்ககிட்ட தான் வாங்குவோம். வலயகாரங்ககிட்ட தராசு இருக்காது, ஒருகுத்து மதிப்பா கிலோ சொல்வாரு. 2 கிலோவுக்கு மேல இருக்கும் 30 ரூபாய்க்கு எங்க அப்பா பேரம் பேசி வாங்கிடுவாங்க.
வீட்டுக்கு கொள்ளைப்புறம் மீனை கொட்டி செதிலெடுத்து நறுக்கி முடியும் வரை அப்பாகூடவே பக்கத்துல ஒக்காந்து வேடிக்கை பார்ப்பேன். சட்டில ஏறி இலைக்கு வரவரைக்கும் வீட்ட சுத்தி சுத்தி வருவது தனி சுகம்.
அது என்னனோ தெரிலயங்க இப்பலாம் கெளுத்தி கொறவை இதெல்லாம் ஊர்பக்கம் கூட பாக்கமுடியறதில்ல. எங்க பார்த்தாலும் வளர்ப்பு மீன் தான். கெளுத்தி மீன் மாதிரியே இப்போ ஏதோ cat fish ன்னு ஒன்னு விக்கிறாங்க பாருங்க கொழ கொழன்னு கொழுப்பு மாதிரி இருக்கும். கெளுத்தி மீனுக்கு நிகர் கெளுத்தி மீன் தான் போங்க.
கெண்டை மீனு இது எல்லாருக்கும் தெரிந்த எலக்காரமான மீனு. எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் சாதாரண மீன். இத பத்தி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
கெளுத்தி மீன் பெரிய ரெண்டு மீச இருக்கும். அத வச்சிக் குத்திச்சுன்னா நறுக்குன்னு தேள் கொட்டுன மாதிரிவ வலி இருக்கும். பெரியக் கெளுத்தின்னா ரத்தமே வந்திறும். அதிகபட்ச நீளமே ஒருச்சான் அளவுத தான் இருக்கும். பெரும்பாலும் ஒருச்சான் அளவைவிட சிறியம்
மீனை தான்ப பார்த்திருக்கிறேன். தலையை கிள்ளிட்டு அப்படியே தலைய கிள்ளி கொழம்பு வைச்சு சாப்பிடலாம். முள்ளோடு அப்டியே மென்னு தின்னலாம்.
கொறவை மீன் கொளத்துல ஆழத்திலும் ஆத்துல ஓரத்துலயும் அண்டிவாழும் வழுவழுப்பான மீன். கொளத்துல தூண்டில் போட்டும் மீன்பிடிக்கும் போது தூண்டிலின் தக்கையின் அசைவை வைத்தே கண்டுபிடிச்சிவோம் கடிக்கறது கெண்டையா இல்ல கொரவவையான்னு. தூண்டி முள்ளில் உள்ள புழுவை கொத்தி கொத்தி கெண்ட மீன் போல இல்லாம லபக்குன்னு முள்ளோட முழுங்கி ஆழத்துக்கு இழுத்து போயி நம்மகிட்ட மாட்டிக்கும். ஆனா ரொம்ப நேரம் தன்னோட உயிரை தக்கவைச்சுக்கும். முள்ளில்லா நல்ல ருசியான மீன்.
உளுவை மீனு மணல் கலர்ல வழுவழுப்புடைய இந்த பெரும்பாலும் மண்ணுல பாதி புதைந்தும் பாதி புதையாமலும் தற்காத்து வாழும். கொஞ்சம் நொலனொலன்னு இருக்கும்.கே இத புடிச்சு கரைல போட்ட சீக்கிரம் செத்துகே வேறைச்சி போயிடும்.
பன்னீர் கெண்டை இது பெரும்பாலும் கூட்டமா கூட்டமா அடசலின் நடுவே தண்ணீரின் மேல்மட்டத்தில் மொய்த்து கொண்டிருக்கும். பச்சை கலர் மாதிரி. இதனை பிடிக்க தூண்டிலில் தக்கை தேவையில்லை, தூண்டில் முள்ளில் புழுவை கோர்த்து அதன் வாயருகே மெல்ல காட்டினாலே போது படக்கென்று கடித்து செடிகளுக்கு இடையே இழுத்து செல்ல முற்பட்டு தூண்டிலில் மாட்டிகொள்ளும். கையால் பிடிப்பது ரொம்ப கஷ்டம், பக்கவாட்டிம் உள்ள செதிலும் சரி முதுகுபுறத்தில் உள்ள முள்ளும் சரி பயங்கர ஷார்ப்பா இருக்கும் கைய கிழிச்சுடும். அருமையான ருசியான குழம்பில் கரையாத மீன்.
சிலேப்பி கெண்ட மீனு போல தான். ஆனா கெண்ட மீனு போல இடையிடயே கண்ட கண்ட கொசுறு முள்ளு இருக்காது. இதுவும் பன்னீர் கெண்ட மாதிரி சிறிய மீன்கள் தண்ணீரின் மேற்பரப்பில் அடைசலில் மிதக்கும், பெரிய மீன்கள் கொஞ்சம் அடியில் இருக்குன். கெண்ட மீன்கள் போல ஆற்றில் வலைவீசி பிடிப்பவர்களிடம் எளிதில் மாட்டிகொள்ளும்.
அப்புறம் பாம்பு மாதிரியே இருக்குற விலாங்கு, ஆறா மீனெல்லாம் எப்பவாவது கெடைக்கும். எங்க ஒருமுறை விலாங்கு மீன் ஞாபகம். இன்னும் சில மீன்கள் சட்டென நினைவில் வரவில்லை.
மழை காலத்தில் புது தண்னிக்கு அயிரை,வெளிச்சி,கெழுத்தி போன்ற மீன்களும் வெயில் காலத்தில் குளம் குட்டை அழியும் போது விரால், கொறவை போன்ற மீன்களும் தாராளமாக உசுரோட கிடைக்கிற காலம் மலையேறி கடைக்கு கடை ஐஸில் அடைக்கப்பட்ட கடல் மீன்கள் பார்க்கிற அவலம்.
ஆத்து மீன புடிக்கிற ஆர்வமும் அதை ருசிக்கிற சுகமும் அதனை அனுபவிச்சனுக்கே தெரியும்.
-தஞ்சை தேவா
முழுக்க முழுக்க மாமிசத்தை மட்டுமே உணவாக உட்கொள்ளும் ஆப்ரிக்க கெளுத்தி(cat fish) மீன்களால், மற்ற வகை மீன் இனங்கள் அழிந்து வருகின்றன. குறிப்பாக, இவை வளர்க்கப்படும் இடங்களில் அரிய வகை உள்ளூர் மீன்களின் இனமே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கெளுத்தி மீன்கள் மழைக்காலங்களில் தண்ணீர் வழியாக வெளியேறி, குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகளில் குடியேறி, அங்கு வளரும் உள்ளூர் மீன்களை கபளீகரம் செய்து விடுகின்றன.
அழிந்து ஆற்று மீன்களும் அதையொட்டிய எனது அனுபவங்களும்:-
வீட்டுக்கு பக்கத்துல ஓடுற கொங்கன் மற்றும் மண்ணியாறு பாசன வாய்க்காலின் மீன்களை அதிகம் ருசித்தவன். அப்பப்போ அருகில் உள்ள காவிரி, கொள்ளிட மீன்களையுன் விட்டு வைத்தது இல்லை. கடல் மீன்களை கண்ணால் பார்த்ததே சென்னை வந்த பிறகுதான்.
ஊர்ல இருக்கும் போது சனி ஞாயிறு ஆச்சுன்னால பசங்கள கெளப்பிகிட்டு மீன் பிடிக்க கெளம்பிடுவோம். தூண்டிலும் கொட்டாங்குச்சியில் மண் புழுவும் எடுத்துக்கொண்டு குடையோடு கெளம்பிடுவோம். எப்படியும் 3 மணிக்குள்ள தேவையான மீன்களோடு தான் வீட்டுக்கு வருவோம்.
அதோடு மீன் வாங்கணும்னா தெருவோடு மீன் பிடிச்சுகினு போகும் வலைகாரங்ககிட்ட தான் வாங்குவோம். வலயகாரங்ககிட்ட தராசு இருக்காது, ஒருகுத்து மதிப்பா கிலோ சொல்வாரு. 2 கிலோவுக்கு மேல இருக்கும் 30 ரூபாய்க்கு எங்க அப்பா பேரம் பேசி வாங்கிடுவாங்க.
வீட்டுக்கு கொள்ளைப்புறம் மீனை கொட்டி செதிலெடுத்து நறுக்கி முடியும் வரை அப்பாகூடவே பக்கத்துல ஒக்காந்து வேடிக்கை பார்ப்பேன். சட்டில ஏறி இலைக்கு வரவரைக்கும் வீட்ட சுத்தி சுத்தி வருவது தனி சுகம்.
அது என்னனோ தெரிலயங்க இப்பலாம் கெளுத்தி கொறவை இதெல்லாம் ஊர்பக்கம் கூட பாக்கமுடியறதில்ல. எங்க பார்த்தாலும் வளர்ப்பு மீன் தான். கெளுத்தி மீன் மாதிரியே இப்போ ஏதோ cat fish ன்னு ஒன்னு விக்கிறாங்க பாருங்க கொழ கொழன்னு கொழுப்பு மாதிரி இருக்கும். கெளுத்தி மீனுக்கு நிகர் கெளுத்தி மீன் தான் போங்க.
கெண்டை மீனு இது எல்லாருக்கும் தெரிந்த எலக்காரமான மீனு. எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் சாதாரண மீன். இத பத்தி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
கெளுத்தி மீன் பெரிய ரெண்டு மீச இருக்கும். அத வச்சிக் குத்திச்சுன்னா நறுக்குன்னு தேள் கொட்டுன மாதிரிவ வலி இருக்கும். பெரியக் கெளுத்தின்னா ரத்தமே வந்திறும். அதிகபட்ச நீளமே ஒருச்சான் அளவுத தான் இருக்கும். பெரும்பாலும் ஒருச்சான் அளவைவிட சிறியம்
மீனை தான்ப பார்த்திருக்கிறேன். தலையை கிள்ளிட்டு அப்படியே தலைய கிள்ளி கொழம்பு வைச்சு சாப்பிடலாம். முள்ளோடு அப்டியே மென்னு தின்னலாம்.
கொறவை மீன் கொளத்துல ஆழத்திலும் ஆத்துல ஓரத்துலயும் அண்டிவாழும் வழுவழுப்பான மீன். கொளத்துல தூண்டில் போட்டும் மீன்பிடிக்கும் போது தூண்டிலின் தக்கையின் அசைவை வைத்தே கண்டுபிடிச்சிவோம் கடிக்கறது கெண்டையா இல்ல கொரவவையான்னு. தூண்டி முள்ளில் உள்ள புழுவை கொத்தி கொத்தி கெண்ட மீன் போல இல்லாம லபக்குன்னு முள்ளோட முழுங்கி ஆழத்துக்கு இழுத்து போயி நம்மகிட்ட மாட்டிக்கும். ஆனா ரொம்ப நேரம் தன்னோட உயிரை தக்கவைச்சுக்கும். முள்ளில்லா நல்ல ருசியான மீன்.
உளுவை மீனு மணல் கலர்ல வழுவழுப்புடைய இந்த பெரும்பாலும் மண்ணுல பாதி புதைந்தும் பாதி புதையாமலும் தற்காத்து வாழும். கொஞ்சம் நொலனொலன்னு இருக்கும்.கே இத புடிச்சு கரைல போட்ட சீக்கிரம் செத்துகே வேறைச்சி போயிடும்.
பன்னீர் கெண்டை இது பெரும்பாலும் கூட்டமா கூட்டமா அடசலின் நடுவே தண்ணீரின் மேல்மட்டத்தில் மொய்த்து கொண்டிருக்கும். பச்சை கலர் மாதிரி. இதனை பிடிக்க தூண்டிலில் தக்கை தேவையில்லை, தூண்டில் முள்ளில் புழுவை கோர்த்து அதன் வாயருகே மெல்ல காட்டினாலே போது படக்கென்று கடித்து செடிகளுக்கு இடையே இழுத்து செல்ல முற்பட்டு தூண்டிலில் மாட்டிகொள்ளும். கையால் பிடிப்பது ரொம்ப கஷ்டம், பக்கவாட்டிம் உள்ள செதிலும் சரி முதுகுபுறத்தில் உள்ள முள்ளும் சரி பயங்கர ஷார்ப்பா இருக்கும் கைய கிழிச்சுடும். அருமையான ருசியான குழம்பில் கரையாத மீன்.
சிலேப்பி கெண்ட மீனு போல தான். ஆனா கெண்ட மீனு போல இடையிடயே கண்ட கண்ட கொசுறு முள்ளு இருக்காது. இதுவும் பன்னீர் கெண்ட மாதிரி சிறிய மீன்கள் தண்ணீரின் மேற்பரப்பில் அடைசலில் மிதக்கும், பெரிய மீன்கள் கொஞ்சம் அடியில் இருக்குன். கெண்ட மீன்கள் போல ஆற்றில் வலைவீசி பிடிப்பவர்களிடம் எளிதில் மாட்டிகொள்ளும்.
அப்புறம் பாம்பு மாதிரியே இருக்குற விலாங்கு, ஆறா மீனெல்லாம் எப்பவாவது கெடைக்கும். எங்க ஒருமுறை விலாங்கு மீன் ஞாபகம். இன்னும் சில மீன்கள் சட்டென நினைவில் வரவில்லை.
மழை காலத்தில் புது தண்னிக்கு அயிரை,வெளிச்சி,கெழுத்தி போன்ற மீன்களும் வெயில் காலத்தில் குளம் குட்டை அழியும் போது விரால், கொறவை போன்ற மீன்களும் தாராளமாக உசுரோட கிடைக்கிற காலம் மலையேறி கடைக்கு கடை ஐஸில் அடைக்கப்பட்ட கடல் மீன்கள் பார்க்கிற அவலம்.
ஆத்து மீன புடிக்கிற ஆர்வமும் அதை ருசிக்கிற சுகமும் அதனை அனுபவிச்சனுக்கே தெரியும்.
-தஞ்சை தேவா
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment