பூக்கும் தாவரங்களின் ஒரு இனப்பெருக்க உறுப்பாக சேவையாற்றுவதோடு, பூக்கள் மனிதர்களால் நெடுங்காலமாக போற்றப்பட்டு முக்கியமாக தங்கள் சுற்றுச்சூழலை அழகுப்படுத்தவும் அதோடு மட்டுமல்லாமல் உணவு ஆதாராமாகவும் பயன்படுத்தி மதித்த போற்றிய காலம் மலையேறி பல நாள் ஆகிவிட்டது.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த அனைவரும் இந்த பூக்களின் தரிசனம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த வகையில் நான் கடந்து வந்த பூக்களின் தொகுப்பு தான் இவைகள். இன்னும் சில பூக்கள் சட்டென்று நினைவில் வரவில்லை. அழகான பூக்களுக்கு பெண்கள் தான் மயங்குவார்கள் என்றில்லாமல் நம்மை திரும்பி பார்த்த வைத்த பூக்கள் எத்தனையோஉண்டு. நகர வாழ்க்கையில் நாம் பல பூக்களின் தரிசனத்தை இழக்கிறோம் இனி வரும் தலைமுறையும் இழக்கத்தான் போகிறது.
மிஞ்சி போனால் ஒவ்வொரு வீட்டு மொட்டைமாடியிலும் தொட்டியில் ஒத்தையாய் தனித்திருக்கும் ரோஜா செடியும் மஞ்சள் நிற மேற்கத்திய பூக்களை யும் மட்டுமேயானால் வளர்த்து அழகு பார்த்து கொள்ளலாம். காலநிலைக்கு ஏற்ப பூக்கும் கிராமத்து பரங்கி பூக்கள், டிசம்பர் பூக்கள், இலுப்பை பூ , ஆவாராம் பூ ,மகிழம் பூ , தாழம் பூ பொங்கன் பூ ,அவரை பூ, காட்டாமணி பூ, கரும்பு பூ ,மாம்பூ இன்னும் பல பூக்கள் சட்டென நினைவில் வரவில்லை இவைகளெல்லாம் எல்லாம் புத்தகங்களில் கூட பார்க்க முடியவில்லை.
நகரங்களில் கல்யாண காட்சிகளில் கூட காகித பூக்களே அலங்கரிக்கின்றன. காலையில் அலங்கரித்து மாலையில் மடித்து வைத்து விடுகிறார்கள். ஏதோ மல்லிகையும் ரோஜாவும் மட்டுமே மறுவாழ்வு கிடைத்தது போல் பொறந்த இடத்திலிருந்து கசங்கி கந்தலாகி நகரத்தில் நாட்டியமாடுகிறது...
ஆனால் மேலே உள்ள பூக்களின் பயன்பாடு குறைவு என்றாலும் அதன் அழகும் அருமையும் மீண்டும் தேட தூண்டுகிறது. ஆனால் இன்றும் பெரும்பாலான மலைவாழ் கிராமங்களில் பழமை மாறாமல் காட்டுப்பூக்களையே சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.
-தஞ்சை தேவா
உங்களில் எத்தனை பேருக்கு இந்த கிராமத்து பூக்களின் அனுபவம் உண்டு ?
எத்தனை பேருக்கு மேலே உள்ள பூக்களின் பெயர் தெரியும் ?
கிராமத்தில் பிறந்து வளர்ந்த அனைவரும் இந்த பூக்களின் தரிசனம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த வகையில் நான் கடந்து வந்த பூக்களின் தொகுப்பு தான் இவைகள். இன்னும் சில பூக்கள் சட்டென்று நினைவில் வரவில்லை. அழகான பூக்களுக்கு பெண்கள் தான் மயங்குவார்கள் என்றில்லாமல் நம்மை திரும்பி பார்த்த வைத்த பூக்கள் எத்தனையோஉண்டு. நகர வாழ்க்கையில் நாம் பல பூக்களின் தரிசனத்தை இழக்கிறோம் இனி வரும் தலைமுறையும் இழக்கத்தான் போகிறது.
மிஞ்சி போனால் ஒவ்வொரு வீட்டு மொட்டைமாடியிலும் தொட்டியில் ஒத்தையாய் தனித்திருக்கும் ரோஜா செடியும் மஞ்சள் நிற மேற்கத்திய பூக்களை யும் மட்டுமேயானால் வளர்த்து அழகு பார்த்து கொள்ளலாம். காலநிலைக்கு ஏற்ப பூக்கும் கிராமத்து பரங்கி பூக்கள், டிசம்பர் பூக்கள், இலுப்பை பூ , ஆவாராம் பூ ,மகிழம் பூ , தாழம் பூ பொங்கன் பூ ,அவரை பூ, காட்டாமணி பூ, கரும்பு பூ ,மாம்பூ இன்னும் பல பூக்கள் சட்டென நினைவில் வரவில்லை இவைகளெல்லாம் எல்லாம் புத்தகங்களில் கூட பார்க்க முடியவில்லை.
நகரங்களில் கல்யாண காட்சிகளில் கூட காகித பூக்களே அலங்கரிக்கின்றன. காலையில் அலங்கரித்து மாலையில் மடித்து வைத்து விடுகிறார்கள். ஏதோ மல்லிகையும் ரோஜாவும் மட்டுமே மறுவாழ்வு கிடைத்தது போல் பொறந்த இடத்திலிருந்து கசங்கி கந்தலாகி நகரத்தில் நாட்டியமாடுகிறது...
ஆனால் மேலே உள்ள பூக்களின் பயன்பாடு குறைவு என்றாலும் அதன் அழகும் அருமையும் மீண்டும் தேட தூண்டுகிறது. ஆனால் இன்றும் பெரும்பாலான மலைவாழ் கிராமங்களில் பழமை மாறாமல் காட்டுப்பூக்களையே சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.
-தஞ்சை தேவா
உங்களில் எத்தனை பேருக்கு இந்த கிராமத்து பூக்களின் அனுபவம் உண்டு ?
எத்தனை பேருக்கு மேலே உள்ள பூக்களின் பெயர் தெரியும் ?
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
1 comments:
மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்... பாராட்டுக்கள்... தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment