Thursday, January 30, 2014

ஐந்தறிவு ஜீவன்களின் அவஸ்தைகள்


அவைகளின் உணர்வுகளையும் புரிந்துகொள்வோம்!

ஐந்தறிவு ஜீவன் என்னடா பாவம் பண்ணுச்சு தனக்கென்று தனியறை இன்றி தன் இனம் பெருக மேற்கொண்ட செயலுக்கு கல்லால் அடித்தா துன்புறுத்துவது குடிகார நாயே, உனக்கு உண்மையில் தில் இருந்தால் ஆறறிவு இருந்தும் தங்களுகென்று தனி இடம் சந்தர்ப்பம் இருந்தும் பலர் கூடும் மெரினா பீச்சில் பொது இடத்தில வாயோடு வாயை கவ்வும் கம்னாட்டிகளை கல் கொண்டு எறி உன் வீரத்தை ஒத்துகொள்கிறேன்.
அதை விடுத்து…

அலுவலகம் முடிந்து வரும் வழியில் நடந்த சம்பம் மனதை வெகுவாக பாதித்து விட்டது. அடிவாங்கிக்கொண்டு தன் பாலுறுப்புகளை பிரித்துக்கொண்டு ஓட முடியாமல் மொத்த அடியையும் வாங்கி கொண்டு தவித்த அந்த ஐந்தறிவு(நாய்கள்) ஜீவன்களின் தவிப்பு இன்னும் என் கண்ணை விட்டு விலகவில்லை.

பணக்கார நாய்களின் சேர்க்கைக்கு பெரும் கிராக்கி இதே சமூகத்தில்தான் இருக்கிறது. தனியாக வியாபார நிலையங்கள். ஒரே இனத்தினைச் சேர்ந்த நாய்களை தேடி இணைக்கும் பணியென ஏராளம். ம்.. ஏழை என்றால் நாய்க்கு கூட கல்லடிதானோ!

நாய்கள் சேர்க்கை முடிந்த பிறகு அரை மணி நேரத்திற்கு விடுபட முடியாத பேரின்ப துன்பத்திற்கான காரணம்...

குளிர் காலம் முடியும் நேரத்தில் நாய்களின் இனப்பெருக்க காலம் தொடங்குகிறது.அப்பொழுது பெண் நாய்களிடமிருந்து ஒரு திரவம் வெளிப்படும். இந்த ஈஸ்ட்ரஸ் 10-12நாட்கள் நீடிக்கும். அப்போது அது போகுமிடமெல்லாம் தன் பாதச்சுரப்பியின் மூலம் ஒருவித வாசனையை ஆண் நாய்களுக்கு “ அழைப்பாக” விட்டுச் செல்லும், இந்த வாசனையால் குஷியான ஆண் நாய்(குதூகலமாக, மிடுக்காக கிளம்பிவிடும்.

தனக்கேற்ற இணையைக் கண்டறிந்தவுடன் தன் காதல் கோரிக்கையை பவ்யமாக வைக்கும். இதை ஆரம்பத்தில் கேர்லெஸாக எடுத்துக் கொள்ளும் பெண் நாய் தன் வாலை அட்ஜெஸ்ட் செய்து கர்வ நடை காட்டும். அதெல்லாம் கொஞ்சநேரம் தான், பின் ஆண் நாயின் கொஞ்சும் குரலிலும், முகபாவத்திலும் சொக்கிபோய், பிரிக்கமுடியாத அளவிற்கு ஆண் நாயுடன் பாசப்பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் பெண் நாய்.

ஆண் நாயின் பிறப்புறுப்பில் விசேஷமாக தண்டில் குருத்தெலும்பு இருக்கும். பெண் நாயின் “உள்ளே” நுழையும் போது நார்மலாகதான் இருக்கும்!அதனால் நுழையும் போது தடங்கல் இல்லை!! சேர்கையின் உச்சத்தில் ஆண் நாயின் பிறப்புறுப்பில் இருக்கும் குருத்தெலும்பு (Os pedis) சேர்க்கையின் போது ஆண் உறுப்பின் பல்ப் பகுதி பொங்கும் குருதியினால் வீங்குவதாலும், சுற்றி உள்ள பெண் உறுப்பு பகுதி ஆசையாக? அது மாட்டிக் கொள்வதால் சேர்க்கை முடிந்த பிறகு அரை மணி நேரத்திற்கு விடுபட முடியாத பேரின்ப? துன்பம்? நிலையில் வெட்கத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் இருக்கும்!

அவைகளின் உணர்வுகளையும் புரிந்துகொள்வோம்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls