முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது.
நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.
நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.
நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.
இவைகளை பிழிந்து சாறு எடுத்து அரை அவுன்சு சாறில். ஒரு ஸ்பூன் நெய் கலந்து நான்கு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து மூட்டுவலி, இடுப்பு வலியில் பூசிட வலி மாறும்.
இலைகளை அரைத்து மூட்டுவலி மேல் கட்டிவர, மூட்டுவலி வீக்கம் மறையும்.
வேர்களை நீரிலிட்டுக் காய்த்து வெறும் வயிற்றில் ஒரு அவுன்சு அருந்த வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.
இலைகளை நெருப்பில் வதக்கி வீக்கம் மேல் கட்ட, வலி தீரும். வீக்கம் வடியும்.
கைப்பிடி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு சேர்த்தரைத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி மாறும்.
சுடுநீரில் இலைகளைப் போட்டு ஆவிபிடிக்க காய்ச்சல், தலைபாரம், சளிக்கட்டு மாறும்.
இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.
வேர்ப்பட்டையை உலர வைத்து இடித்து பொடியாக்கி சிட்டிகை பொடியை தேனில் குழைத்து வாரம் இருமுறை காலையில் தின்றுவர நரம்புவலி வாதப்பிடிப்பு குணமாகும்.
வேப்பெண்ணெயை சட்டியில் ஊற்றி சூடாகியபின் கைப்பிடி இலைகளை இட்டு வதக்கி, வீக்கத்தின் மேல் வைத்துக் கட்ட வீக்கம் குறையும்.
பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.
நீரில் இலைகளையும், பூக்களையும் இட்டு சூடாக்கி, குளித்துவர தலைநீர், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம், உடல்வலி மாறும்.
இலைகள், பூக்களை மணலில் இட்டு வறுத்து, லேசான சூட்டில் கழுத்துப் பிடரி வலி ஏற்படும் போது ஒற்றடம் கொடுக்க வலி மாறும்.
சமஅளவு நொச்சி இலைச்சாறு, நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து குளித்துவர கழுத்தில் ஏற்படும் வீக்கம், நெறிக்கட்டு குணமாகும்.
நொச்சி இலைகளை ஒரு துணியில் தலையணை போல் அடைத்து தலைக்கு வைத்துத் தூங்கி வர, தலைவலி, நரம்புவலி, கழுத்து வலி, தலைநீர், தலைபாரம் இவைகள் குணமாகும்
நொச்சியிலையைத் தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து வீக்கம், கழுத்து நரம்புவலி, சன்னி, இழுப்பு, கழுத்து வாதம், மூக்கடைப்பு (பீனிசம்) குணமாகும்.
நொச்சி இலைச் சாறை கட்டிகளின் மீது இரவில் பற்றுப் போட்டுவர கட்டிகள் கரைந்துவிடும்.
நொச்சிச் சாற்றை நரம்புப் பிடிப்பு, தலைநோய், இடுப்புவலிக்குத் தேய்த்துவர குணமாகும்.
இவைகளை பிழிந்து சாறு எடுத்து அரை அவுன்சு சாறில். ஒரு ஸ்பூன் நெய் கலந்து நான்கு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து மூட்டுவலி, இடுப்பு வலியில் பூசிட வலி மாறும்.
இலைகளை அரைத்து மூட்டுவலி மேல் கட்டிவர, மூட்டுவலி வீக்கம் மறையும்.
வேர்களை நீரிலிட்டுக் காய்த்து வெறும் வயிற்றில் ஒரு அவுன்சு அருந்த வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.
இலைகளை நெருப்பில் வதக்கி வீக்கம் மேல் கட்ட, வலி தீரும். வீக்கம் வடியும்.
கைப்பிடி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு சேர்த்தரைத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி மாறும்.
சுடுநீரில் இலைகளைப் போட்டு ஆவிபிடிக்க காய்ச்சல், தலைபாரம், சளிக்கட்டு மாறும்.
இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.
வேர்ப்பட்டையை உலர வைத்து இடித்து பொடியாக்கி சிட்டிகை பொடியை தேனில் குழைத்து வாரம் இருமுறை காலையில் தின்றுவர நரம்புவலி வாதப்பிடிப்பு குணமாகும்.
வேப்பெண்ணெயை சட்டியில் ஊற்றி சூடாகியபின் கைப்பிடி இலைகளை இட்டு வதக்கி, வீக்கத்தின் மேல் வைத்துக் கட்ட வீக்கம் குறையும்.
பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும்.
நீரில் இலைகளையும், பூக்களையும் இட்டு சூடாக்கி, குளித்துவர தலைநீர், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம், உடல்வலி மாறும்.
இலைகள், பூக்களை மணலில் இட்டு வறுத்து, லேசான சூட்டில் கழுத்துப் பிடரி வலி ஏற்படும் போது ஒற்றடம் கொடுக்க வலி மாறும்.
சமஅளவு நொச்சி இலைச்சாறு, நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து குளித்துவர கழுத்தில் ஏற்படும் வீக்கம், நெறிக்கட்டு குணமாகும்.
நொச்சி இலைகளை ஒரு துணியில் தலையணை போல் அடைத்து தலைக்கு வைத்துத் தூங்கி வர, தலைவலி, நரம்புவலி, கழுத்து வலி, தலைநீர், தலைபாரம் இவைகள் குணமாகும்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது .
உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!!
ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment