Thursday, January 8, 2015

மறுமலர்ச்சி (கம்பனுக்கு கைகொடுத்து)

கம்பனுக்கு கைகொடுத்து
காவேரிக்கு அணை எடுத்து
செம்பொன்னால் சிலம்பரத்து
சாமிக்கொரு கூரை காத்து
புஞ்சையில நஞ்சையில
பொன் விளையும் தஞ்சையில
புலிக்கொடிய எத்தி வச்சு
புகழ்கொடிய பறக்க விட்டு….
ஈழ நாட்டு எல்லை வரை
எசையாடு ஆண்டிருந்த சோழ நாட்டு மன்னருங்க
சந்ததியில் வந்தவரே.....!!! ஆமா....
புகழிருக்குது பெயரிருக்குது ராசு படையாச்சி தான்....!!!
எங்க ராசு படையாச்சி தான்....!!!
விரல் அசைவில ஊர் இருக்குது
நீர் நிலம் சாட்சி தான்...!!!
(அந்த நீர் நிலம் சாட்சி தான்...!!!)
தெரு முனையில சிலை இருக்குது
அவர் பெருமையா அது உரைக்கிறது
ஊருக்கெல்லாம் உலைய வச்சு
சோறிடுவார் இலைய வச்சு
அவர் தான் நம்ம சாமியின்னு
ஊரே ஒன்று கூடி நின்று
கொட்டுங்கடா உறுமி மேளம்
தட்டுங்கடா புதிய தாளம்......
ஹேய் (கொட்டுங்கடா உறுமி மேளம்
தட்டுங்கடா புதிய தாளம்)......
தானத்துல உயர்ந்த தானம்
அன்ன தானம் உலகிலே சாமி(ராசு படையாச்சி) போல
யாரும் அத செஞ்சதே இல்ல.......
சூரியனும் அஞ்சிடுமே சாயும் காலம் பொழுதிலே
சாமி மட்டும் அடுப்பை நம்பி பார்த்ததே இல்ல
ஆச்சி பயடையாசி செய்யும் ஊரு தான் இது
சாதி மத வேதம் எல்லாம் ஓடி போனது
கோதண்டமும் கூத்திரையும் கைய குலுக்குது
சிலுவை எல்லாம் சிநேகிதிமா சேர்ந்து சிரிக்குது….
எதுவும் இங்க பொதுவா மனம் பழகும்
ஒட்டு உறவா அதுக்கு தகுந்த வழிய வகுத்த
அவர் தான் நம்ம சாமியின்னு
ஊரே ஒன்று கூடி நின்று
கொட்டுங்கடா உறுமி மேளம்
தட்டுங்கடா புதிய தாளம்......... கொட்டுங்கடா.........
மணமுடிக்க மனம் இல்லாம வாழ்திருப்பவரு
ஊர் மக்களைத்தான் பெத்த பிள்ளை போல் நினைப்பாரு......
தாழ்த்தப்பட்ட ஜனங்களுக்கு தோள் கொடுப்பவறு
அந்த ஏழை பாழ சிரிச்சிருந்தா இவர் சிரிப்பாரு.......
நோய் இல்லாம நொடி இல்லாம நூறு ஆண்டு ஊர ஆண்டு பூமி மீது சாமி வாழ பாட்டு தட்டுங்கடா...
பூமி மீது சாமி வாழ பாட்டு தட்டுங்கடா.....
ராமையா சாமையா....அட வீரைய்யா வடி வேலய்யா உனக்கும் எனக்கும் நிழலை கொடுக்கும்
அவர் தான் நம்ம சாமியின்னு ஊரே ஒன்று கூடி நின்று கொட்டுங்கடா உறுமி மேளம் தட்டுங்கடா புதிய தாளம்......... கொட்டுங்கடா.........!!!
புகழிருக்குது பெயரிருக்குது ராசு படையாச்சி தான்....!!!
எங்க ராசு படையாச்சி தான்....!!!
விரல் அசைவில ஊர் இருக்குது
நீர் நிலம் சாட்சி தான்...!!!
(அந்த நீர் நிலம் சாட்சி தான்...!!!)
தெரு முனையில சிலை இருக்குது
அவர் பெருமையா அது உரைக்கிறது
ஊருக்கெல்லாம் உலைய வச்சு சோறிடுவார் இலைய வச்சு
அவர் தான் நம்ம சாமியின்னு
ஊரே ஒன்று கூடி நின்று
கொட்டுங்கடா உறுமி மேளம்
தட்டுங்கடா புதிய தாளம்......
அப்படி போடு
(கொட்டுங்கடா உறுமி மேளம் தட்டுங்கடா புதிய தாளம்)..........!!!
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls