
அட நான் சந்தர்ப்பவாத நாத்திகன்னு ஊருக்கே தெரியும்
படிக்கும் காலத்துல வாத்தியார்கிட்ட உதை வாங்ககூடாதுன்னே போறவழில உள்ள கோயில்ல வேண்டிகினு தைரியாமா போவது வழக்கம். படிச்சிட்டு போனவனுக்கு வேண்டிப்பான் என்னையை போல படிக்காத மண்டும் வேண்டிப்போம். இங்க என்ன ஹை லைட்டுனா என்னைக்கெல்லாம் உதைவாங்ககூடாதுன்னு வேண்டிக்கிறமோ அன்னைக்கு தான் செமத்தியா வாங்குவோம். படிக்காம போனா வாத்தியார்கிட்ட இருந்து கடவுளாலையும் காப்பாத்த முடியாதுன்றது உங்களுக்கே தெரியும்
உண்மையிலேயே கடவுளுக்கு சக்தியிருந்தா என்னைய வாத்தியார்கிட்ட இருந்து காப்பாத்திருக்கும்ல அன்னைக்கு முடிவுபண்ணினேன் கடவுளை நம்புறது வேஸ்ட் அவருக்கு சக்தியில்லைன்னு. வெறும் கல்ல கும்பிடற கூமுட்டையா...