Thursday, November 28, 2013

உடலை வருத்தி உயிர் வாழ வேண்டுமா?

ஓவர் சீனு உடம்புக்கு ஆகாது தம்பிகளா...

உடம்புல உள்ள எல்லாச் சக்தியையும் பணயம் வைக்குற ஒருத்தர்தான் சிக்ஸ் பேக்குக்கு ஆசைப்படலாம். அதே நேரத்தில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்பதை உணர்வது மிகவும் அவசியம்

சிக்ஸ் பேக் ஒரு நல்ல விஷயம் இல்லை. ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளிக்கோ, மீனவருக்கோ, விவசாயிக்கோ இயற்கையாக வரும் சிக்ஸ் பேக்கும் நாம் செயற்கையா உருவாக்கிக்குற சிக்ஸ் பேக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

ஓர் ஆண் மகனை அழகாய்க் காட்டுகிறது என்பதற்காக, உடலை வருத்தி செய்யும் சிக்ஸ் பேக்கின் பின்னணி என்ன? அதற்கு இளைஞர்கள் கொடுக்கும் விலை என்ன?

அபாயத்தை தேடும் முறை...

சிக்ஸ் பேக் வைத்திருப்பவர்கள்   ''காலை ஆறு மணிக்கு இரண்டு டீ, ஒன்பது மணிக்கு ஓட்ஸ் மற்றும் எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு. காலை 11 மணிக்கு பப்பாளிப் பழம். சர்க்கரை இல்லாத புரதச் சத்து நிறைந்த பானம். மதியம் ஒரு மணிக்கு அரை கிலோ சிக்கன். எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி, மாலை ஐந்து மணிக்கு மீண்டும் புரதச்சத்து பானம், 7.30 மணிக்கு திரும்பவும் புரதச்சத்து பானம், இரவு ஒன்பது மணிக்கு எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, ஒரு ஆப்பிள். இவைதான் உணவு. மாவுச்சத்து, நார் சத்து, கொழுப்புச் சத்து, அடங்கிய உணவுப் பொருட்களை அறவே சாப்பிடக் கூடாது.

தண்ணீரின் அளவைப் படிப்படியாகக் குறைக்க வேண்டி இருக்கும். மேலும், சர்க்கரை, உப்பு, தண்ணீர் மூன்றையும் உடலை விட்டு சுத்தமாக நீக்க வேண்டும்.

சிக்ஸ் பேக் செய்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும் நீரின் அளவினை 40 சதவிகிதம் அளவுக்குக் குறைத்தே ஆக வேண்டும். மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம். மேலும், தலை முடி உதிர்த்தல், மலச்சிக்கல் பிரச்னைகளும் ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

பொதுவாக நம் உடலின் வயிற்றின் அடிப்பகுதி, தோள்பட்டை, கை, தொடை, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு அதிக அளவு தேங்கியிருக்கும். அடிவயிற்றில் ட்ரான்ஸ்வெர்ஸ் தசை மற்றும் ரெக்டஸ் தசை இருக்கும். இவை, கொழுப்பு முற்றிலும் நீக்கப்பட்ட பிறகு, ஆறு அடுக்குகளாகத் தாமே பிரியும். இதுதான் சிக்ஸ் பேக் என்று சொல்லப்படுகிறது.

சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம்தான். அதிலும் புரதம், மாவுச்சத்து இல்லாமல், கடும் உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை.தசைநார் வழியாக ரத்தம் செல்லாவிடில், இதயத்துடிப்பு குறைந்து மயக்க நிலை ஏற்படலாம்.

அழகுக்கு ஆசைப்பட்டுத்தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் விழுகிறார்கள். ஆனால், நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ் பேக் அழகு என்பது தற்காலிகமானதே. நீடித்தது அல்ல. தவிர, அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்பதையும் இளைஞர்கள் உணர வேண்டும்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதில் என்ன அழகோ...?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls