Thursday, June 26, 2014

கொலையை விபத்தாக சித்தரிக்கும் சட்டங்களின் ஓட்டைகள்…

கொலைச் செயலில் ஒருவனின் உயிர் போகின்றது. அதே நேரத்தில் சாலை விபத்திலும் உயிர் போகின்றது. அதற்கு குற்றவாளிக்கு மரண தண்டனை கூட விதிக்க முடியும். ஆனால் இங்கு விபத்து இழைத்தவருக்கு அபராதம் அல்லது சொற்ப மாதங்கள் சிறைத்தண்டனை மட்டும் விதிக்கப்படுகின்றது. காரணம் இது விபத்து. எனவே ஒரு கொலையை விபத்தாக செய்து விட்டால் ? பெரும் தண்டனையிலிருந்து தப்பி விடலாமே.. ! இது சட்டத்தில் உள்ள ஓட்டை. மற்றொன்று, இழப்பீடு கொடுக்க காப்பீட்டு நிறுவனம் காத்து நிற்கின்றது. இது மற்றொரு சலுகை.

இலகு ரக, கன ரக வாகன ஓட்டிகள் - அவர்கள் யாராக இருந்தாலும், விபத்து செய்து விட்டால், கடும் தண்டனை உண்டு என்ற அளவில் இ.த.ச. திருத்தப்பட வேண்டும். நீதிமன்றம் நிர்ணயிக்கும் இழப்பீட்டில் 40 சதம் விபத்து ஏற்படுத்திய வாகன உரிமையாளரும் கொடுக்க வேண்டும். வழக்கு முடிந்து அவர் தனது 40 சதம் இழப்பீடு பணம் தரும் வரை, அவரது வாகனம் நீதிமன்ற பற்றுகையில் இருக்க வேண்டும். வாகன உரிமை பெயர் மாற்றம் செய்வதன் மீது வட்டார போக்குவரத்து கழகம் தடை விதிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இரத்து செய்யப்பட வேண்டும்.

"கன்னா.. பின்னா.." என்று வாகனம் ஓட்டுபவர்களுக்கு இப்படி "கன்னா.. பின்னா.." என்று சில சட்ட நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் இருந்தால்தான் விபத்து குறையும். விபத்தில் அடிபட்டவன் போல, விபத்து செய்தவனும் தொடர் மன வேதனை, உளைச்சலில் இருக்க வேண்டும்.

சுருங்கச் சொன்னால் மனு நீதிச் சோழன் கொடுத்த தண்டனை போல கூட இருக்கலாம்.....!!

விபத்து, போக்குவரத்து, சட்டம், தண்டனை ஆகியன மீது மக்களுக்கு அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு போதாது.
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls